Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேசியதாவது:-
வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் 21-ம் நூற்றாண்டின் இரட்டை காப்பியங்கள். நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை தட்டும். வைரமுத்து எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.